கட்ட விலக்கமாறு ஆனாலும்.கப்பல்ல வரனும்னு நினைக்கிற ஊரு நம்ம அதிராம்பட்டினம் காலப்போக்கில் மக்கள் உள்ளூர் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து நடைமுறை படுத்தி வருகிறார்கள்.
ஆனால் பக்கத்து ஊரான பட்டுக்கோட்டைக்கு சென்றுதான் பர்சேஸ் செய்யும் போக்கினை விடுவாதாய் இல்லை எனலாம்.
வாசிங்மெசின் ,வாட்டர் மிலன் என குண்டூசி வரைக்கும் பட்டுக்கோட்டையில வாங்குனாத்தான் நிம்மதி கிடைக்கும் போல.
அட நம்மூரு மார்கெட்ல மலைபோல குவிந்து கிடக்கும் தர்பூசணியை விட்டுப்புட்டு பட்டுக்கோட்டையில விக்குற தர்பூசனில என்னத்தான் இருக்கு?
ஒசி பஸ்ல வெலக்கமாறு வாங்க போன நம்மூறு பெண்மணி ஒருவர் 12ஆம் நம்பர் பஸ்ல குந்தியிறுக்க என்னதான் குறுக்க வந்திச்சோ தெரில சாடார் என சடன் பிரோக்கை அழுத்த சட்டனெ விழுந்து நொறுங்கியது சண்டாள தர்பூஸ்.
பள்ளிகொண்டான் அருகே இந்த சம்பவம் நடந்ததாக அவ்வழியே சென்ற வியாபாரி ஒருவர் நமக்கு தகவலாய் சொல்லி இருக்கிறார்.