கடந்த, மார்ச் மாதம் 17ம் தேதி கலிபோர்னியா மாகாணம், Fairfield ல் உள்ள மஸ்ஜித் அல் நூர் என்ற பள்ளிவாசலில் வரும் நோன்புக்கு இப்தார் ஏற்பாடு செய்வது பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. அதன்படி, ஏப்ரல் 17ம் தேதியும், 24ம் தேதியும் இப்தார் கொடுப்பது என்றும், தராவீஹ் கதமல் குர் ஆனின் நிறைவில் பள்ளிவாசலுக்கு வருவோருக்கு விருந்து கொடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த அமர்வுக்கு இப்ராஹீம் இப்னு மீரான் தலைமை தாங்கினார். அது சமயம், மேல் கூறப்பட்ட அனைத்து விருந்தோம்பலுக்கும் அமீராக இருக்கும் கட்ட மரைக்காயர் அஷ்ரப், சிங்கம் அமீன், அ ர அப்துல் ஜப்பார், அ ர முஹம்மது தஸ்தகீர், ஜாபர் சாதிக், முகைதீன், மஹதி, முஹம்மது பிலால், உஸ்மான் இன்னும் பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல, நாம் வாழும் நாட்டில் அந்த அந்த முஹல்லாவில் அதிரையர்கள் ஒன்றினைந்து, செயலாற்றினால் நன்மை பயக்கும்.
செய்தி: அ ர அ ல