Saturday, April 20, 2024

மேலத்தெரு முகல்லாவாசிகளை ஓட்டு வங்கியாக மட்டும் பார்க்காதீர்! திமுக கவுன்சிலர்களுக்கு அதிரை NMS ஷாபிர் அஹமது கண்டனம்!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை SDPI கட்சியின் 9, 10 & 20வது வார்டு பொருப்பாளரான NMS ஷாபிர் அஹமது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “அதிரை நகராட்சியின் 9, 10, 20வது வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் அதிகமானோர் மேலத்தெருவின் விரிவாக்க பகுதியான தொக்காலிகாடு ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாகவே நகராட்சி தேர்தல் சமயத்தில் அங்குள்ள வீடுகளின் வாசல்களில் ஸ்டிக்கர்களை ஒட்டியும் நேரடியாக பிரச்சாரம் செய்தும் திமுக ஓட்டுக்கேட்டது. ஆனால் தேர்தல் முடிந்ததும் அந்த பகுதி நகராட்சி எல்லையில் வராது என கூறி திமுக கவுன்சிலர்கள் தங்கள் பொறுப்புகளை தட்டிகளிக்க முயல்வது அதிர்ச்சியாக உள்ளது. ஓட்டு வாங்க மட்டும் இப்பகுதி மக்களை திமுக பயன்படுத்தியது இதன் மூலம் வெட்டவெளிச்சமாகிவிட்டது. இதனை எல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டு தான் உள்ளனர். அப்பகுதி மக்களை வாக்கு வங்கியாக மட்டும் பார்க்காமல் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மேலத்தெருவின் விரிவாக்க பகுதியை மட்டும் அதிரையுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...