தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கடற்கரைத் தெருவில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற உள்ளது.
நாட்டின் 73வது சுதந்திரத்தை மகிழ்ச்சியாய் கொண்டாடும் இந்த தருணத்தில் வருகின்ற (17.8.2019) சனிக்கிழமை கடற்கரைத் தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம்,கடற்கரைத் தெரு ஜமாத்தார்கள் மற்றும் முஹல்லாவாசிகள் சார்பில் நடத்தப்படுகிறது.முகாமில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
மேலும் இதனை தொடர்ந்து சென்ற கல்வியாண்டில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கின்றனர்.