Smart Adirai மொபைல் ஆப் என்பது e-Governance ஆகும். அதாவது இந்த மொபைல் ஆப்-ல் நீங்கள் தெரிவிக்கும் நகராட்சி தொடர்பான புகார்கள் நகராட்சி தலைவர், சம்மந்தப்பட்ட வார்டு உறுப்பினர், நகராட்சி ஆணையர் ஆகியோரின் கவனத்திற்கு உடனடியாக செல்லும். புகாருடன் புகைப்படம், வீடியோக்களை இணைக்கலாம். பின்னர் அந்த புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து Smart Adirai ஆப்-ல் நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்படும்.
உதாரணமாக 7வது வார்டில் குப்பைகள் அகற்றப்படவில்லை என வைத்துக்கொள்வோம். பொதுமக்கள் அது தொடர்பான புகார்களை புகைப்படத்துடன் Smart Adirai ஆப்-ல் எளிதாக பதிவிடலாம். பிறகு அந்த புகாரின் நிலை என்ன என்பதை மக்கள் கண்காணிக்க முடியும். இதனையடுத்து அந்த புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நகராட்சி தரப்பில் இருந்து புகார்தாரருக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
இதனால் நகராட்சி நிர்வாகம் விரைவாக செயல்பட்டு மக்களுக்கு தரமான நேர்மையான சேவையை வழங்க முடியும்.
இந்த Smart Adirai மொபைல் app செயல்பாட்டிற்கு வர வாக்களிப்பீர் வைரம் சின்னத்திற்கு… என்றும் மக்கள் பணியில் SDPI.