Saturday, April 20, 2024

முஸ்லீம் சிறைவாசிகளுக்கு ஜாமீன் கூட வழங்க கூடாது : திமுக அரசு பிடிவாதம்!!

Share post:

Date:

- Advertisement -

மனித உரிமை செயல்பாட்டாளரான மார்க்ஸ் அந்தோனிசாமி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில் “அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்ய உத்தரவிட்ட அரசு ஆணையில் இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் மீது பாரபட்சம் காட்டிய திமுக அரசு, அந்தக் கரையை போக்குவதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி மாண்புமிகு ஆதிநாதன் தலைமையில் குழு அமைத்தது, அந்த குழுவே ஆயுள் சிறைவாசிகளின் விடுதலையை பரிசீலித்து அறிக்கை கொடுக்கும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது ஆனால் அறிவித்த அந்த குழுவின் இடம்பெற்ற மற்ற நபர்களின் பெயர் பட்டியல் இதுவரை வெளியாகவில்லை அதேபோல் அந்தக் குழுவும் செயல்படவில்லை.

இந்நிலையில் தற்போது உச்சநீதிமன்றத்தில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகள் ஜாமீனில் வெளி வருவதையும் தற்போது தடை செய்ய வேண்டும் என தமிழக அரசு சிபிசிஐடி மூலம் கேட்டுள்ளது மிகவும் வருத்தத்திற்குரியதாகவும், ஏமாற்றத்திற்குரியதாகவும் இருக்கின்றது.

தொடர்ந்து திமுக அரசு இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராக வரலாற்றுப் பிழையை செய்து கொண்டே வருகின்றது எனவே வரலாற்று தவறிலிருந்து திமுக அரசு மீள வேண்டுமெனில் ஏழு தமிழர்கள் மற்றும் இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...