Thursday, April 18, 2024

ஹிஜாப் அணிந்த மாணவிகளை அனுமதிக்க மறுக்கும் கல்லூரி முதல்வர் : படிப்பு பாழாகிடும் என மாணவிகள் கண்ணீர்!! (வீடியோ இணைப்பு)

Share post:

Date:

- Advertisement -

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ஒரு மகளிர் கல்லூரியில் இஸ்லாமிய பெண்கள் வகுப்பில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையான நிலையில், அந்த கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவர் கல்லூரி நிர்வாகத்தின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக பேசப்படுகிறது.

இந்நிலையில் உடுப்பியில் இருக்கும் குந்தாப்பூரில் உள்ள ஒரு பல்கலைக்கழக கல்லூரியில், இஸ்லாமிய  மாணவிகள் ஹிஜாப் அணைந்து கல்லூரிக்கு வர தடை விதிக்கப்பட்டது.

கடந்த புதன்கிழமையன்று  சில மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பிற்கு வந்துள்ளனர். அதற்கு எதிர்வினையாக 100 மாணவர்கள் காவி நிறமுள்ள சால்வையை அணிந்து வகுப்பிற்கு வந்துள்ளனர்.

ஹிஜாப் அணிந்து கல்லூரி வந்த இஸ்லாமிய மாணவிகள் கல்லூரி வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டதும் தங்கள் கல்லூரி முதல்வரிடம் ஹிஜாபோடு தங்களை வகுப்பில் அனுமதிக்குமாறு கெஞ்சுகின்றனர். மேலும் அந்த மாணவிகள், இரண்டு மாதங்களில் தேர்வு இருப்பதாகவும், தற்போது திடீரென்று ஏன் கல்லூரி,  ஹிஜாப் அணிவதில் பிரச்னையை எழுப்புகிறது எனவும் கேள்வி எழுப்பும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...