அதிராம்பட்டினம் நகர மனித நேய ஜனநாயக கட்சியின் அதிராம்பட்டினம் நகர வாடுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் இன்று மஜக அலுவலகத்தில் நடைபெற்றது.
மாநில செயலாளர் தாஜுதீன், மதுக்கூர் ராவுத்தர் பங்கேற்று தேர்தல் செயல்பாட்டு திட்டங்களை வெளியிட்டனர்.
ஒருங்கிணைந்த சமுதாய கூட்டமைப்பின் கீழ் SDPI மஜக இணைந்து தேர்தலை சந்திப்பது என்ற அடிப்படையில், இந்த தேர்தலில் வார்டு எண்கள் 5,17,24 ஆகிய வார்டுகளில் போட்டியிடுவது என முடிவு எடுக்கப்பட்டு செயலாற்றி வருகின்றனர்.
இது குறித்து மாநில செயலாளர்களான
நாச்சிகுளம் தாஜுதீன், மதுக்கூர் ராவுத்தர்ஷா
ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது இஸ்லாமியர்கள் வாழும் பகுதியில் வார்டு மறுவரையறை என்ற பெயரில் குளருபடிகளை செய்து வஞ்சித்துள்ளனர்.
அதுபோல இஸ்லாமியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிறைவாசிகள் விடுதலையில் மதம் பார்ப்பது உள்ளிட்ட அரசின் பாரபட்ச நடவடிக்கைகள் இஸ்லாமிய மக்களை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இத்தேர்தலில் இஸ்லாமியர்களின் வாக்கு திமுகவுக்கு எதிராக வியூகம் அமைத்து செயலாற்றி வருவதாக தெரிவித்தனர்.
இந்த அறிமுக நிகழ்வின்போது நகர மஜக நிர்வாகிகள் தொண்டர்கள் உடனிருந்தனர்.