அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெரு 18வார்டில் ஆதி திராவிடர், தலித் மக்கள் அதிகளவில் வாழ்கின்றனர்.
இப்பகுதியில் தலித்,ப் ஆதிதிராவிடர்கள் வாக்குகள் ஏறத்தாழ 500 வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்றும், தனி வார்டு அந்தஸ்த்திற்கு தகுதியான எங்கள் வார்டை தனி வார்டாக அறிவிக்க வேண்டும் என பல முறை கோரிக்கை விடுத்தும், செவி சாய்க்காத அரசை கண்டிக்கும் நோக்கில் இம்முறை தேர்தல் புறக்கணிப்பு செய்திட உளாதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த யூடியுபர் சரன் தெரிவிக்கையில், 40ஆண்டுகளாக எங்களின் வார்டு தொடர் புறக்கணிப்பில் இருந்து வருகிறது.
இம்முறையாவது எங்கள் பகுதி தனி வார்டாக அறிவிப்பார்கள் என்ற நிலை இருந்தும் சில அரசியல் சூழ்ச்சியால் பொது வார்டாகவே நீடிக்கிறது இதனை அரசுக்கும் கண்டனத்தை பதிவு செய்யும் நோக்கில் இம்முறை தன்னெழுச்சியாக ஒவ்வெரும் வாக்காளர்களும் தேர்தல் புறக்கணிப்பு செய்ய உள்ளதாக தெரிவித்தார்.