Thursday, March 28, 2024

அதிரை அரசு பள்ளிக்கு அடிப்படை வசதிகள் தேவை! ஆய்வுக்கு வந்த அதிகாரியிடம் கோரிக்கை !!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 9ஆம் வகுப்பு வரை வகுப்புகள் செயல்பட்டு வருகிறது.

பன்னெடுங்காலமாக செயல்பட்டு வரும் இக்கல்வி ஸ்தாபனத்தில் ஏராளமான அதிரையர்கள் கல்வி பயின்று இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பழுதடைந்த வகுப்புகளை அகற்றிவிட்டு புதிய வகுப்பறைகள் கட்டப்படும் என கூறப்பட்டது.

ஆனால் போதிய அளவு வகுப்பறைகள் கட்டப்படவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் பெய்த கன மழையினால் நீர் வகுப்பறைகளை சூழ்ந்தது.

இதனால் மாணாக்கர்கள் கல்வி பயில இயலவில்லை, இதுகுறித்து பள்ளி கல்வி அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது நகர திமுக செயலாளர் இராம குணசேகரன் மற்றும் 13வது வார்டு திமுக பொறுப்பாளர் சமூக ஆர்வலர் சைஃபுதீன் ஆகியோர் பள்ளிகூடத்தின் அத்தியாவசிய தேவைகள் குறித்தும், குறிப்பாக போதிய வகுப்பறை வடிகால் வசதிகளை ஏற்படுத்தி தருமாறு என கேட்டு கொண்டனர்.

இதனை ஏற்ற அதிகாரிகள் போர்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக தெரிவித்தார்.

முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி மாலதி கல்வித்துறை அதிகாரி உள்ளிட்டவர்களை வரவேற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...