Thursday, March 28, 2024

RSS தலைவர் மோகன் பகவத் என்ன உச்ச நீதிமன்ற நீதிபதியா? ஒவைசி கேள்வி

Share post:

Date:

- Advertisement -

எந்த அடிப்படையில் ராமர் கோயில் அதே இடத்தில் கட்டப்படும் என்று RSS தலைவர் மோகன் பகவத் கூறுகிறார், அவர் என்ன உச்ச நீதிமன்ற நீதிபதியா என்று ஏஐஎம்ஐஎம் தலைவர் அசதுத்தீன் ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில்தான் ராமர் கோயில் கட்டப்படும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியதற்கு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசதுத்தீன் ஒவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, அயோத்தி பிரச்சனை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இப்படி ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை அவரால் எப்படி சொல்ல முடிந்தது என்றும், அவர் என்ன உச்சநீதிமன்ற நீதிபதியா அல்லது தீர்ப்பு இப்படித்தான் வரும் அவருக்கு தெரியுமா? என்றும் கேள்வி எழுப்பினார்.
எதன் அடிப்படையில் விஹெச்பி தலைவர்களில் ஒருவரான சுரேந்தர் ஜெயின், அக்டோபர் 18, 2018-ல் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் தொடங்கப்படும் என்று கூறினார் என்றும், அவர்களிடம் ஏதாவது ரகசிய தகவல்கள் உள்ளனவா என்று ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.  டிசம்பர் 5 ஆம் தேதி அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...