தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் கனமழையினால் பள்ளத்தாக்கான பகுதிகள் நீர் நிரம்பி காட்சியளிக்கிறது.
குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீரை அகற்ற மாவட்ட நிர்வாகமும் போர்கால அடிப்படையில் களம் கண்டு வருகிறது.
இந்த நிலையில் அதிராமட்டினம் அரிமா சங்கம், அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் என பல்வேறு தரப்பினர் பேரிடர் மீட்புக்கு தயார் நிலையில் இருக்கிறார்கள்.
இது தவிர பேரூராட்சி சார்பில் செயல் அலுவலர் புயல் பாதுகாப்பு மையத்தை தயார் நிலையில் வைத்யிருப்பதாக தெரிவித்துள்ளார்.
கன மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு பாதுக்காப்பான இடங்களில் தங்க வைக்க மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டதன் பேரில் பாதுகாப்பு மையங்கள் தயார் படுத்தபட்டிருக்கிறது.
இதனை மாவட்ட ஆட்சியர்,துணையாட்சியர்,தாசில்தார் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பார்வையிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கனமழை பேரிடர் உதவிகுழுக்களின் உதவியை நாட அந்தந்த பகுதி தன்னார்வலர்களை அழைத்திட அதிரை எக்ஸ்பிரஸ் மக்களை கேட்டு கொள்கிறது.