Friday, April 19, 2024

சென்னை : நேப்பியர் பாலத்தில் செல்ஃபி எடுக்க முயன்று கூவம் ஆற்றில் விழுந்த இளைஞர்!

Share post:

Date:

- Advertisement -

சென்னையின் அடையாளங்களுடன் ஒன்று நேப்பியர் பாலம். இந்தப் பாலத்தில் ஏராளமானவர்கள் செல்ஃபி எடுப்பதுண்டு. இந்தநிலையில் நேற்று மாலை ஒருவர் பாலத்தில் செல்ஃபி எடுத்திருக்கிறார். அப்போது அவர் கால் தவறி கூவம் ஆற்றுக்குள் விழுந்துவிட்டார். அவரின் கையிலிருந்த செல்போனும் ஆற்றுக்குள் விழுந்துவிட்டது. கூவம் ஆற்றுக்குள் சிக்கிய அவரால் வெளியில் வர முடியவில்லை. மேலும் அந்த இளைஞர் விழுந்ததையும் யாரும் கவனிக்கவில்லை. அதனால் இரவு முழுவதும் அவர் கூவம் ஆற்றுக்குள்ளேயே தவித்திருக்கிறார்.

இந்தநிலையில் இன்று காலை நேப்பியர் பாலம் வழியாக நடைபயிற்சியில் ஈடுபட்டவர்களுக்கு பாலத்தின் கீழ் பகுதியிலிருந்து ஒருவரின் அபயக்குரல் கேட்டது. அதனால் பாலத்தின் கீழே சிலர் எட்டிப்பார்த்திருக்கின்றனர். அப்போது இளைஞர் ஒருவர் கையை அசைத்து தன்னை காப்பாற்றும்படி கூறியிருக்கிறார். அதைப்பார்த்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும் அண்ணாசதுக்கம் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர், போலீஸார் கயிறு மூலம் இளைஞரை மேலே தூக்கினர்.

அவரிடம் விசாரித்தபோது சென்னை பெரியமேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் எனத் தெரியவந்தது. இவர் செல்ஃபி எடுக்க முயன்றபோது எதிர்பாரதவிதமாக கூவம் ஆற்றுக்குள் விழுந்தது தெரியவந்தது. இதையடுத்து கார்த்திக்கிற்கு முதலுதவி அளிக்கப்பட்டு அவர் வீட்டுக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். செல்ஃபி மோகத்தில் இதுபோன்ற விபரீதங்களில் யாரும் சிக்க வேண்டாம் என போலீஸாரும் தீயணைப்பு துறையினரும் எச்சரித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...