Thursday, April 25, 2024

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி தேர்வு!

Share post:

Date:

- Advertisement -

தமிழ்நாட்டில் சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை தேர்வு செய்து சுதந்திர தின விழாவில் விருது வழங்குவது வழக்கம். அதன்படி வருகிற சுதந்திர தின விழாவில் பரிசு-விருது பெறும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை தமிழக அரசு தேர்வு செய்து அறிவித்துள்ளது.

இதில் தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.25 லட்சம் மற்றும் விருது அந்த மாநகராட்சிக்கு வழங்கப்படுகிறது. கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விருதுகளை வழங்குகிறார்.

சிறந்த நகராட்சிக்கான விருது ஊட்டி நகராட்சிக்கு கிடைத்துள்ளது. இதற்கு முதல் பரிசாக ரூ.15 லட்சமும், விருதும் வழங்கப்படுகிறது. 2-ம் இடமாக திருச்செங்கோடு நகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.10 லட்சம்-விருது வழங்கப்படுகிறது. 3-வது இடத்துக்கான பரிசு சின்னமனூர் நகராட்சிக்கு கிடைத்துள்ளது. இதற்கு ரூ.5 லட்சம்-விருது வழங்கப்படுகிறது.

இதே போல் திருச்சி மாவட்டம் கல்லக்குடி பேரூராட்சிக்கு முதல் பரிசாக ரூ.10 லட்சம்-விருது, கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சிக்கு 2-ம் பரிசாக ரூ. 5 லட்சம்-விருது, 3-ம் பரிசாக சிவகங்கை மாவட்டம் கோட்டையூர் பேரூராட்சிக்கு ரூ.3 லட்சம் பரிசு-விருது வழங்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...