Friday, April 19, 2024

தக்வா பள்ளியின் வக்ஃபு நிலங்கள் விரைவில் மீட்கப்படும் – அதிரையில் தமிழக வக்ஃபு வாரிய தலைவர் உறுதி!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் நகர முன்னாள் முஸ்லிம் லீக் நகர தலைவர் டாக்டர் முஹம்மது சாலீஹ் அவர்கள் இல்லத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போதைய தமிழக வக்பு வாரிய தலைவருமான அப்துல் ரஹ்மான் இன்று வருகை தந்தார்.

பின்னர் அதிரை எக்ஸ்பிரஸிற்கு அளித்த சிறப்பு நேர்காணலில் அவர் கூறியதாவது : அதிராம்பட்டினம் தக்வா பள்ளியின் சொத்துக்கள் கண்டறியப்பட்டு அதற்கான ஆதாரங்கள் திரட்டப்பட்ட நிலையில், வக்பு நிலங்களில் வாடகைக்கு அமர்த்தப்பட்ட சிலர் உரிமை கோரி வருகிறார்கள்.

அவர்களிடம் எந்த தஸ்தாவேஜிகள் இருந்தாலும் வக்பு நில சட்ட வரையரைக்கு உட்பட்டு அவர்களை அப்புறப்படுத்த அதிகாரம் இருக்கிறது. அந்த வகையில் வருகின்ற காலங்களில் தக்வா பள்ளியின் அனைத்து வக்பு நிலங்களும் மீட்கப்பட்டு நிர்வாகத்தின் கீழ் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தார்.

முன்னதாக வக்பு வாரிய தலைவரை ஐயுஎம்எல் மாவட்ட செயலாளர் ஜெய்னுல் ஆபிதீன், நகர தலைவர் K.K. ஹாஜா, நகர செயலாளர் வழக்கறிஞர் முனாஃப், சேக் அப்துல்லா, சாகுல் ஹமீது, மாவட்ட பிரதிநிதி ஜமால் முஹம்மது ஆகியோர் வரவேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...