Friday, April 19, 2024

முன்னாள் ஆசிரியர்கள்,மாணவர்களை நெகிழவைத்த அரசுப்பள்ளி(படங்கள்)!!!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நூற்றாண்டை கடந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்தித்த நெகிழ்ச்சியான நிகழ்வு நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி அரசினர் மேல்நிலைப் பள்ளி 1914 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் போர்டு ஹை ஸ்கூல் என்று ஆரம்பிக்கப்பட்ட பள்ளி இதில் ஜெமினி பிக்சர் நிறுவனர் S. S வாசன் .முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும் அதிமுக பொது செயலாளர் சசிகலா போன்ற பிரபலங்களும். எண்ணற்ற மருத்துவர்கள். நீதிபதிகள். காவல் துறை அதிகாரிகள் என பல பேரை உருவாக்கிய இந்த பள்ளியின் 90 T0 9 7 வரை படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து ஆசிரியர்கள் மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது இதில் பங்கேற்ற ஆசிரியர்கள் தங்களது மலரும் நிைனைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

ஆசிரியர் சந்தான கிருஷ்ணன் கூறியது 36 ஆண்டுகள் இந்த பள்ளியில் பணியாற்றினேன் இங்கு படித்த மாணவர்கள் என் பிள்ளைகளாக தான் இருந்தார்கள். அவர்கள் வளர்ச்சியை கண்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.

மற்றொரு ஆசிரியர் பன்னீர் செல்வம் கூறிய போது நான் சர்ச்க்கு போகும் போது கடவுளை வணங்குவேன் அதற்கு பிறகு இந்த பள்ளி கூடத்தை படியை மிதிக்கும் பேn து கடவுளை வணங்குவேன் இது கோவில் இந்த கோவிலை மேம்படுத்த அனைத்து மாணவர்களும் முன்னெடுக்க வேண்டும் என கூறினார்.

ஆசிரியர் நெப்பொலியன் கூறியது நாங்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் எங்களுக்கு பேச ஆள் கிடைத்தால் பேசி கொண்டே இருப்போம் நாங்கள் பாடம் நடத்திய காலத்தில் முரட்டு தனமாக நடந்து கொண்ட நீங்கள் இப்பொழுது எங்களை பேச வைத்து ரசிக்கின்றீர்களே பாசத்தை கூட முரட்டு தனமாகத்தான் காட்டுவீர்களா என நெகிழ்ந்தார்.

இந்த நிகழ்வில் ஆசிரியர் கள் மாணவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர் மாணவர் ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி காலில் விழந்து ஆசிர்வாதம் பெற்றனர் தங்கள் படித்த பள்ளிக்கு கணினி வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...