ஒன்றிய அரசின் கையாளாகத போக்கினால் எரிபொருளின் விலை எல்லைத் தாண்டி சென்று கொண்டுள்ளது.
இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் ஆகாயத்தில் பறக்க ஆரம்பித்து விட்டது.
வாயைக்கட்டி வயிற்றைகட்டி வண்டிக்கு பெட்ரோல் நிறப்பினால் வக்கற்றவர்கள் சிலரால் அந்த பெட்ரோலை நள்ளிரவில் சூறையாடி செல்வது சமீப காலமாக அதிகறித்து விட்டது.
சண்டாளன் ஆட்சியில நிறுத்திய பைக்கும் நிரப்பமாய் பெட்ரோல் குடிக்கிறாதே என பலமுறை நினைத்தவர்களுக்கு ஒரு விடை கிடைத்துள்ளது.
அதிராம்பட்டினம் புதுமனை தெருவில் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனம் ஒன்றில் பெட்ரோல் திருடம் காட்சி CCTV மூலம் பதிவாகி இருக்கிறது.
பெட்ரோல் திருடும் கும்பல் நள்ளிரவு நேரங்களில் வீதிகளில் நிறுத்தப்படு இருக்கும் வாகனங்களை நோட்டமிட்டு இத்திருட்டு சம்பவத்தில் ஈடுபடுகிறார்கள்.
எனவே விழிப்புடன் இருந்து நமது வாகனங்களை பாதுகாப்போம்.
காவல்துறை கவனத்திற்கு.
சமீப நாட்களாக புதிய முகங்களின் நடமாட்டம் அதிரையில் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இவர்கள் யார்? யாரிடம் பணியாற்றுகிறார்கள், இவர்களின் அடையாளச் சான்று சரியாக இருக்கிறதா?
என்பன உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.