புதுக்கோட்டையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை தேசிய மனித உரிமை அமைப்புகள் கூட்டமைப்பின்-NCHRO சார்பில் நேரில் சந்தித்து கூட்டரிக்கை தொகுப்பினை மனுவாக அளித்தனர்.
அதில் ஏழு தமிழர்கள் உள்ளிட்ட இஸ்லாமிய சிறைக்கைதிகள், மற்றும் சந்தன வீரப்பன் அண்ணன் மாதையன் ஆகியோர்களை கருணை அடிப்படையில் விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூட்டறிக்கையின் தொகுப்பை வழங்கினர்.
இதனை பெற்றுக் கொண்ட சட்டத்துறை அமைச்சர் இவ்விவகாரம் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதில் NCHRO திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் Z முஹம்மது தம்பி, மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முஹம்மது ஜியாவுதீன் உள்ளிட்ட முக்கிய நபர்கள் அமைச்சரின் இல்லத்தில் சந்தித்தனர்.