Saturday, April 20, 2024

மாயவரம்-காரைக்குடி மார்க்கத்தில் ரயில் சேவையை உடனடியாக தொடங்க வேண்டும்- MP திருநாவுகரசர் கோரிக்கை !

Share post:

Date:

- Advertisement -

மாயவரம்-திருவாரூர்- திருத்துறைப்பூண்டி- அதிராம்பட்டினம்- பட்டுக்கோட்டை வழியாக இருந்த குறுகிய இருப்பு பாதையை அகற்றிவிட்டு அகல ரயில் பாதை அமைக்கப்பட்டது.

இதன் காரணமாக நிறுத்தப்பட்ட ரயில் போக்குவரத்தை தொடங்க பல்வேறு அமைப்புகள் கட்சிகள் போராடி வருகின்றன.

இந்த நிலையில் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் திருநாவுக்கரசர், கார்த்தி சிதம்பரம்,SS பழனிமாணிக்கம், நவாஸ்கனி ஆகியோர்கள் இணைந்து டெல்லியில் ரயில்வே வாரியத்தலைவர் சுனில் சர்மாவை சந்தித்து மனு அளித்தனர்.

அதில் சுதந்திர இந்தியாவுக்கு முன்னரே இத்தடம் அமைக்கப்பட்டது என்றும், அகல ரயில் பாதை பணிகள் 100℅ முழுமை அடைந்து இன்று வரை ரயில்களை இயக்க வில்லை என்று குறிபிட்டுள்ளனர்.

இத்தடத்தில் அதிவேக சோதனை ஓட்டம் எல்லாம் முடிந்த நிலையில் ரயில்களை இயக்க நிர்வாகம் மெத்தனம் காட்டுவது ஏன் கேள்வி எழுப்பினர்.

மனுவை பெற்றுக் கொண்ட சுனில் சர்மா இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...