கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி முடிவுக்கு வர தொடங்கியுள்ளது.
இதனால் அரசு சில தளர்வுகளை அறிவித்து கட்டுப்பாட்டுடன் செயல்பட அறிவுருத்தி இருக்கிறது.
சில மாவட்டங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் இன்னும் குறையாத காரணத்தால் தஞ்சாவூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் எந்த வித தளர்வுகளும் அறிவிக்கபட வில்லை .
ஆனாலும் சில கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் அரசு நிர்ணயித்து உள்ள 7மணிக்கு மேல் இன்னும் கடைகள் அடைக்கப்படாமல் இருக்கிறது.
இதுகுறித்து பெயர் சொல்ல விரும்பாத அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர் ஒருவர் தொலைபேசி வாயிலாக அழைத்தார்.
அப்போது பேசிய அவர் அரசு அளித்துள்ள சில சலுகைகளை தவறாக அதிரை வியாபாரிகள் பயன்படுத்தி வருகிறார்கள் என்றார்.
மேலும் நமது மாவட்டத்தில் இன்னும் ஊரடங்கின் தளர்வுகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை என்றும் வியாபாரிகள் அரசின் உத்தரவுக்கு செவிசாய்த்து கட்டுப்பட வேண்டும் என்றார்.