அதிராம்பட்டினம்- பட்டுக்கோட்டை சாலையில் தினந்தோறும் ஏராளமான மாடுகளால் சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் இன்றுமாலை ஏராளமான மாடுகள் சாலையோரம் உள்ள புல்களை மேய்ந்து கொண்டிருந்தன.
அப்போது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மாட்டின் மீது பலமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே மாடு உயிரிழந்தன.
பலமுறை பேரூராட்சி நிர்வாகத்தினால் மாடு வளர்ப்போருக்கு அறிவுரை கூரியும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கிறது.
மாடுதானே என மெதனமாக இருக்கும் மாடு வளர்ப்போர், அதனை ஒரு உயிர் என பாவித்து காக்க வேண்டும் எனவும், மாடுகளால் தினந்தோறும் ஏராளமான மனித உயிர்களும் பலியாகி வருகின்றது.
இதனை தடுக்க, அத்துமீறி சாலைகளில் மேய விடும்.மாட்டின் உரிமையாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்தால் இதுபோன்ற விபத்துக்களை தடுக்கலாம் என்கின்றனர் கால்நடை ஆர்வலர்கள்.