தஞ்சை மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மல்லிப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலையில் வடிகால் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சாக்கடை வடிகால்கள் மல்லிப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைக்க வேண்டும் என்பது வியாபாரிகள்,சமூக ஆர்வலர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்தது. இது குறித்து முதலமைச்சர் தனிப்பிரிவு,கிராம சபா கூட்டங்கள் என அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில் கால்வாய் அமைக்கும் திட்டத்திற்கு அனுமதி கிடைத்தன் அடிப்படையில் சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியின் மூலம் பணிகள் நடைபெற்று வருகின்றன.