கொரொனா நிவாரணத்திற்கு நிதி கோரி முதலமைச்சர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
இதனை அடுத்து பல்வேறு தரப்பில் இருந்து நிதிகளை வழங்கி வருகிறார்கள்.
அந்த வகையில் அதிராம்பட்டினம் MKN மதரஸா டிரஸ்ட் சார்பில் அதன் செயலர் S. முகமது மீரா சாகிப் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாத்துரை அவர்களிடம் ஒரு லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
இதனை பெற்றுகொண்ட அண்ணாத்துரை முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் MKN மதரஸா டிரஸ்ட் தலைவர் அப்துல் ஹாதி, முன்னாள் அதிரை நகர சேர்மன் அஸ்லம் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.