Thursday, April 18, 2024

அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி! காயிதே மில்லத் நகர் மக்களின் தாகம் தணிந்தது!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டிணம் காயிதே மில்லத் நகரில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ளவர்களுக்கு குடிநீர் பிரச்சனை இருந்து வருகிறது. இதனை சரிசெய்திட வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் கோரிக்கையை அதிரை எக்ஸ்பிரஸ் வாயிலாக மல்லிப்பட்டிணம் காயிதே மில்லத் நகரில் குடிநீர் வசதியின்றி அவதிப்படும் பொதுமக்கள் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டோம்.

இதன் எதிரொலியாக இன்று (ஜூன்.1) வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வேந்திரன், ஆண்டிக்காடு ஊராட்சி மன்ற தலைவர் வரதராஜன் ஆகியோர் அப்பகுதியை பார்வையிட்டு உடனடி ஏற்பாடாக தண்ணீர் வழங்குவதற்குண்டான வழிவகைகளை செய்தனர். இதனால் அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...