தஞ்சாவூர் மாவட்டம் ஆண்டிகாடு ஊராட்சி மல்லிப்பட்டினம் காயிதே மில்லத் நகர் பகுதியில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிநீர் இன்றி அவதி.
அடிப்படைத் தேவையான குடிநீர் வசதி இல்லாமல் இந்த பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர் குடிநீர் தேவைக்கு அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து பேருந்து நிலையம் சென்று குடிநீர் எடுத்து வரக்கூடிய சூழல் இருந்து வருகிறது. குடிநீரை தனியார் வாகனங்கள் மூலமாகவும் விலைக்கு வாங்க கூடிய சூழல் இருந்து வருகிறது.
கடந்த ஆட்சியில் பலமுறை புகார்களும் கோரிக்கைகளும் அப்பகுதி மக்கள் மற்றும் எஸ்டிபிஐ கட்சியினர் அதிகாரிகள் மட்டத்தில் கோரிக்கை வைத்திருந்தனர்.
ஆனால் இதுநாள் வரை அந்தப் பகுதியில் தண்ணீர் பிரச்சனையை சரி செய்யப்படவில்லை. அதனால் அந்த பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு அந்தப் பகுதி மக்களுக்கு குடிநீர் பிரச்சினையை சரி செய்திட நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து குடிநீர் இணைப்புகளை கொடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருக்கிறது.