தஞ்சைமாவட்டம்,மல்லிப்பட்டினம் புதுமனை தெருவில் வெளியாட்கள் உள்ளே வர அனுமதி இல்லை என்று நோட்டீஸ் வைத்து பொதுமக்கள் ஈசிஆர் அருகே உள்ள சாலையை அடைத்தனர்.
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பும்,இறப்பும் அதிகமாக இருப்பதால் கிராமங்கள்தோறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இளைஞர்கள் வெளியே செல்வதை தடுத்திடவும், வெளியாட்கள் உள்ளே வருவதை தடுத்திட தடுப்புகளை அமைத்துள்ளனர்.அதிகமான நபர்கள் மாலை நேரங்களில் வெளியூரில் இருந்து துறைமுகம் செல்வதாகவும் இதனால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிடும் என்கிற அச்சத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதை செய்திருப்பதாக அந்த பகுதி இளைஞர் தெரிவித்தனர்.