Friday, April 19, 2024

அதிரை ரேசன் கடைகளில் கோளாறு! பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி!!

Share post:

Date:

- Advertisement -

கொரோனா பெருந்தொற்று காலத்தில் தமிழக மக்களின் அத்தியாவசிய பொருட்கள் தேவையை நிவர்த்தி செய்வதில் ரேசன் கடைகள் முக்கிய பங்கு ஆற்றுகின்றன. இந்த சூழலில் அதிரை ரேசன் கடைகளில் பயோ மெட்ரிக் முறையாக இயங்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டோர் நம்மிடம் கூறுகையில், எங்களது ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி கடந்த காலத்தில் ரேசன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்கினோம். ஆனால்
பொது விநியோக மென்பொருள் தற்போது எங்களின் பயோ மெட்ரிக்கை ஏற்க மறுக்கிறது. இதன் காரணமாக எங்களுக்கான அத்தியாவசிய பொருட்களை பெற முடியாத சூழல் இருப்பதாக கூறினர். மேலும் இந்த பிரச்சனைக்கான தீர்வை பெற தாலுக்கா அலுவலகம் செல்லுமாறு ரேசன் கடை ஊழியர்கள் கூறுவதாகவும், முழு ஊரடங்கு அமலில் உள்ளநிலையில் எவ்வாறு தாலுக்கா அலுவலகம் செல்ல முடியும் என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...