Friday, March 29, 2024

கர்நாடகாவில் முழு ஊரடங்கு அமல்!

Share post:

Date:

- Advertisement -

கொரோனா தொற்று பரவல் கர்நாடகாவில் மிகவும் உச்சமடைந்து வருவதால் கர்நாடகா மாநிலத்தில் வரும் மே 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

கர்நாடாகவில் இன்று ஒரே நாளில் 48,781 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 592 பேர் ஒரே நாளில் பலியாகி உள்ளனர். 28623 பேர் கொரோனாவில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடகாவில் குணமாகி உள்ளனர்.

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு மிகப்பெரிய அளவில் உச்சம் பெற்று வருவதால் முழு லாக்டவுன் அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகா மாநில முதல்வர் எடியூரப்பா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கர்நாடக மாநிலத்தில் மே 10 ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை முழு லாக்டவுன் அமல்படுத்தப்படுகிறது.

அனைத்து ஹோட்டல்கள், மதுபான விடுதிகள், பார்கள் இயங்கக்கூடாது. காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் காலை 6 மணிமுதல் காலை 10 மணிவரை திறந்திருக்க அனுமதிக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு பலனளிக்காததால் தற்காலிகமாக முழு லாக்டவுன் அமல்படுத்தப்படுகிறது என்று தெரிவித்துளளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...