கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பட்டுக்கோட்டை, பேராவூரணி தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை 25 சுற்றுகளாக நடைபெற உள்ளது. இன்று காலை 8 மணிக்கு துவங்கும் வாக்கு எண்ணிக்கையை கடந்த 2016ம் ஆண்டு தேர்தலை போல் பிரத்யேகமாகவும் துல்லியமாகவும் வழங்க அதிரை எக்ஸ்பிரஸ் தயார்நிலையில் உள்ளது. பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் கா.அண்ணாதுரை, அதிமுக சார்பில் என்.ஆர்.ரெங்கராஜன், அமமுக சார்பில் எஸ்.டி.எஸ்.செல்வம், மக்கள் நீதி மய்யம் சார்பில் மருத்துவர் சதாசிவம் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதியில் 71.75சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
பட்டுக் “கோட்டை”யை பிடிக்க போவது யார்?
இணைந்திருங்கள்… www.adiraixpress.com