Friday, April 19, 2024

நெறிமுறைகளை பின்பற்றி நோன்பு கஞ்சி விநியோகியுங்கள் – ஜமாஅத்துல் உலமா அறிவுறுத்தல்!

Share post:

Date:

- Advertisement -

கொரோனா தொற்று உச்சம் அடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் நாளை திங்கட்கிழமை முதல் கடும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்ற அறிவிப்பு குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் முஸ்லீம்களுக்கு ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், அல்லாஹ்வின் நாட்டத்தை பொருந்திக் கொள்ளும் வகையில் தமிழக அரசின் ஆணையை ஏற்று வரும் 30/04/2021 வரை அனைத்து தொழுகைகளையும் வீடுகளிலேயே நிறைவேற்றிக் கொள்ளுமாறு இஸ்லாமியர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

பள்ளிவாசல் பணியாளர்கள் பள்ளியில் தொழுகை நடத்த அனுமதி உள்ளதால், ஐவேலைத் தொழுகையையும் தராவீஹ் தொழுகையையும் பள்ளிப் பணியாளர்களை கொண்டு நிறைவேற்றி கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிவாசலில் இஃப்தார் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டாம் என்றும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நோன்பு கஞ்சி காய்ச்சி மக்களுக்கு வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...