தமிழகத்தில் 9,10,11,12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளில் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொடர்ந்து கொரோனா தொற்று பரவி வருகிறது.
இந்த நிலையில் இன்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, 9,10,11ம் வகுப்புகளுக்கு வரும் 22/03/2021 திங்கட்கிழமை முதல் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மறுஅறிவிப்பு வரும் வரையில், பள்ளிகள் மூடப்படும் என்றும் 9,10,11ம் வகுப்புகளுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பொதுத்தேர்வு எழுதும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ந்து பள்ளிகள் நடைபெறும் என்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்காக விடுதிகள் தொடர்ந்து இயங்கலாம் என அனுமதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது