Friday, April 19, 2024

9, 10, 11ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையின் குட்நியூஸ் !

Share post:

Date:

- Advertisement -

9, 10, 11-ம் வகுப்புக்கு எந்த தேர்வும் நடைபெறாது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஏப்ரல் 15ம் தேதிக்குள் மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்கவும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. அதன்பின்னர் கடந்த ஜனவரி மாதம் முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு தொடங்கப்பட்டன. மேலும், குறிப்பிட்ட வகுப்பு பயிலும் மாணவர்கள் விருப்பப்பட்டால், பெற்றோரின் அனுமதி கடிதம் பெற்று பள்ளிக்கு வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே 9, 10 மற்றும் 11ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் மீண்டும் கொரோனா தலைதூக்க தொடங்கியுள்ளது. ஒரு சில பள்ளிகளிலும் ஏராளமான மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், 9, 10, 11-ம் வகுப்புக்கு எந்த தேர்வும் நடைபெறாது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறாது என்றும், ஏப்ரல் 15ம் தேதிக்குள் மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்கவும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...