Saturday, April 20, 2024

தமிழகத்தில் மீண்டும் இ-பாஸ் !

Share post:

Date:

- Advertisement -

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் வேகம் அதிகமாக உள்ளது.

தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு நாளில் 562 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மத்திய அரசு தமிழகம், கேரளா உள்பட தென்மாநிலங்கள் அனைத்திற்கும் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி எச்சரித்தது.

இந்நிலையில் தான் வெளி நாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் இ – பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்தால் இ பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது ஆந்திரா, புதுவை, கர்நாடக தவிர்த்து மற்ற மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ – பாஸ் கட்டாயம் என்று அரசு அறிவித்துள்ளது.

தென்ஆப்பிரிக்கா பிரேசில், இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு நேரடியாக வருவோர் கட்டாயம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே இ பாஸ்க்கு விண்ணப்பிக்க முடியும். 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். விமான நிலையத்தில் வந்த உடன் அவர்களுக்கு சோதனையும் நடத்தப்படும். கொரோனா நெகட்டிவ் சான்றிதழை https://www.newdelhiairport.in/ என்ற இணையதளத்தில் அவர்கள் பதிவு செய்திருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பரவல் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில் இனி அங்கிருந்து வந்தால் இபாஸ் கட்டாயமாகும். எனினும் அரசு முன்பு போல் கடுயைமாக நடந்து கொள்ள வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. வெளிமாநிலங்களுக்கு ஆட்டோ இபாஸ் முறையை அமல்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...