Tuesday, April 23, 2024

மேற்கு வங்கத்தில் மீண்டும் மம்தா முதல்வராவார் – ஏபிபி கருத்துக்கணிப்பு !

Share post:

Date:

- Advertisement -

சட்டசபை தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் 164 இடங்கள் வரை வென்று மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக ஏபிபி செய்தி நிறுவனம்- சி வோட்டர் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால், ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்துவது கடினம் என்பதால், 8 கட்டங்களாக நடத்தப்படுகிறது என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முதல் கட்டத் தேர்தல் மார்ச் 27-ம் தேதியும், 2-வது கட்டம் ஏப்ரல் 1-ம் தேதியும் நடைபெற உள்ளது. 3-வது கட்டம் ஏப்ரல் 6-ம் தேதியும், 4-வது கட்டம் ஏப்ரல் 10-ம் தேதியும், 5-வது கட்டம் ஏப்ரல் 17-ம் தேதியும் நடைபெறும்.

6-வது கட்டத் தேர்தல் ஏப்ரல் 22-ம் தேதியும், 7-ம் கட்டத் தேர்தல் தேதி ஏப்ரல் 26-ம் தேதியும், 8-வது மற்றும் இறுதிக்கட்டத் தேர்தல் ஏப்ரல் 29-ம் தேதியும் நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் எப்படியாவது முதன் முதலாக ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்று பாஜக மிகத் தீவீரமாக செயல்பட்டு வருகிறது. அதேசமயம், 3-வது முறையாக ஆட்சியைக் பிடிக்க திரிணாமூல் காங்கிரஸ் முனைப்புடன் உள்ளது.

இந்நிலையில், ஏபிபி ( ABP) நியூஸ் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில், மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 148 – 164 இடங்கள் வரை வெல்லக் கூடும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பாஜக 92 – 108 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...