வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்ட பேரவைக்கான தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் நேற்று அறிவித்தார்.
இதனை அடுத்து தமிழக அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு யாருக்கு எவ்வளவு சீட் என தலைமை கழக நிர்வாகிகள் பரீசீலனை செய்து வருகின்றனர்.
அதன்படி தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளராக விருப்பம் தெரிவித்து பலரும் மனு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னதாக இத்தொகுதியில் விருப்பம் தெரிவிக்கும் முக்கிய புள்ளிக்கு உயரிய பதவி கொடுக்கப்பட்டுவிட்டது. ஆகையால் பட்டுக்கோட்டை தொகுதியில் முன்னர் போட்டியிட்டு வெற்றி பெற்ற கா. அண்ணாத்துரைக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
இவரை தலைமை கழகமும் A லிஸ்ட்டில் வைத்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல் தெரிவிக்கின்றன. ஒருபக்கம் கூட்டனி கட்சிகளின் நெருக்கடியும் தொடர்கிறதால் யாருக்கு சீட் என்பதை உயர்மட்ட குழுவின் முடிவுக்கு விட்டுவிடுவதாக பட்டுக்கோட்டை தொகுதி உபிக்கள் தெரிவிக்கின்றனர்.