Friday, March 29, 2024

நாளை நடைபெற இருந்த பட்டுக்கோட்டை போராட்டம் ரத்து !

Share post:

Date:

- Advertisement -

நபிகளாரை இழிவுப்படுத்தி பேசிய பாஜகவின் கல்யாணராமன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சமூக ஒற்றுமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். முன்னதாக கைது செய்யப்பட்ட கல்யாண ராமனை கடுமையான சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி பட்டுக்கோட்டை அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தன.

இந்த நிலையில் சற்றுமுன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தமிழக காவல்துறையினர் கைது செய்யபட்டுள்ள கல்யாண ராமன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அதற்கான ஆனையை வெளியிட்டுள்ளதை பட்டுக்கோட்டை காவல் துணை கன்காணிப்பாளர் மூலம் போராட்ட குழுவினருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளன.

இதனை அடுத்து அவசரமாக கூட்டப்பட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தின் வாயிலாக எடுக்கப்பட தீர்மானத்தின் படி நாளை 12-02-2021 அன்று நடைப்பெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் சமய நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் செயல்படும் நபர்களை யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்கிட வேண்டும் என பட்டுக்கோட்டை அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...