நாட்டின் 72வது குடியரசு தினவிழா அதிராம்பட்டினம் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்தியாவின் 72வது குடியரசு தின விழா தாஜுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் தலைவர் P.M.K.தாஜுதீன் தலைமையிலும் நிர்வாகிகள் மற்றும் ஆலோசணைக்குழு உறுப்பினர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் துவக்கமாக
J. முஹம்மது புஹாரியால் கிராஅத் ஓதப்பட்டு
தேசிய கீதம் பாடப்பட்டது. செயலாளர் B.ஜமாலுதீன் வரவேற்புரை ஆற்றினார். செயலாளர் M. காதர் முகைதீன் சிறப்புரை ஆற்றினார். தலைவர் P.M.K. தாஜுதீன் தேசிய கொடி ஏற்றினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் M.S. ஜபுருல்லா, K. நஜ்முதீன், M.I. முஹம்மது அஷ்ரப், V.T. அஜ்மல் கான், A. ஷஹாபுதீன், K. முஹம்மது அப்துல்லா, S. பகுருதீன்(துணை பெருளாளர்), M.M.S. அன்வர், A. சிக்கந்தர், J. முஹம்மது புஹாரி, K. ராஜிக் அஹமது, S.நிஜாம், TIYA தலைவர் M. மஃசின், TIYA செயலாளர் H.சபீர் அஹமது, M.நூர் முகம்மது உள்ளிட்ட முஹல்லாவாசிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பாக கலந்து கொண்ட அனைவரும் “போராடிப் பெற்ற சுதந்திரத்தையும், அரசியல் சாசன சட்டத்தையும் பாதுகாப்போம்” என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை N. முஹம்மது மாலிக் தொகுத்து வழங்கினார். துணை செயலாளர் N. சம்சூல் மன்சூர் நன்றியுரை கூறினார். இறுதியாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.