அதிராம்பட்டினம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கிளை அலுவலகத்தில் 72 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. முன்னதாக இந்திய விடுதலையின் போது உயிர்நீத்த தியாகிகளுக்கு சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு அவர்களின் தியாகங்கள் நினைவு கூறப்பட்டது.
பின்னர் தேசிய கொடியை ஏற்றிவைத்த நகர தலைவர் கே.கே ஹாஜா நஜிமுத்தீன் பேசுகையில், நம் முன்னோர்களின் தியாகத்தால் இந்திய நாடு விடுதலை பெற்று சுதந்திர காற்றை சுவாசித்து வருகிறோம் என்றும், இன்று சிலரின் கையில் சிக்கிய ஆட்சியால் நாடு சின்னாபின்னமாகி கொண்டுள்ளது என்றும் இதற்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள மக்களால் தேர்தல் முறையில் சாவுமணி அடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றார்.
இந்நிகழ்வில் கட்சி முன்னோடிகள், பொதுமக்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.