அதிரையில் கடந்த வாரம் கனமழை பெய்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்தது. இந்நிலையில் சில நாட்களாக அதிரை சுற்றுவட்டார பகுதிகளில் பனி பொழிவு கடுமையாக உள்ளது. இதனிடையே இன்று அதிகாலை அதிரையில் மூடு பனி நிலவியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். சாலைகளை வெண்பனி ஆக்கிரமித்ததால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டவாறு சென்றன.

Your reaction