Thursday, March 28, 2024

சிபிஎஸ்சி 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு !

Share post:

Date:

- Advertisement -

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் நாடு முழுவதும் இதுவரை திறக்கப்படவில்லை. சில மாநிலங்களில் மட்டும் பத்தாம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது.

தமிழகம் உள்பட பல மாநிலங்களில் ஆன்லைன் வழியாக மட்டுமே வகுப்புகள் நடைபெறுகிறது. வகுப்புகள் ஆன்லைன் வழியாக நடத்தப்படுவதால் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது.

ஆனால் மத்திய கல்வி அமைச்சகமோ கட்டாயம் இந்த ஆண்டு சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் 12 வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவித்தது. இணையவழித் தேர்வுகளாக அல்லாமல் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வந்து தேர்வு எழுதும் முறையில்தான் தேர்வுகள் இருக்கும் என்றும் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறியிருந்தார்.

இதன்படி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் 12 வகுப்பு பொதுத் தேர்வுகள் மே 4-ம் தேதி தொடங்கி, ஜூன் 14 வரை நடைபெற உள்ளது. மாணவர்கள் நன்கு தேர்வுக்கு தயாராகும் விதமாக ஒவ்வொரு தேர்வுக்கும் போதுமான நாள்கள் இடைவெளியுடன் தேர்வுகள் நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் ஜூலை 15-ல் வெளியாகும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...