மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நேற்று தமுமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிரை நகர தமுமுக சார்பில் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமுமுக மாநில துணை செயலாளர் அதிரை அஹமது ஹாஜா, தமுமுக மாநில துணைத்தலைவர் கோவை செய்யது, தமுமுக மாநில பொறுப்பாளர் திருச்சி ரபீக், தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் சேக்முகைதீன் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், மத்திய அரசிற்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.