தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் புதுமனைத்தெருவில் குடியிருப்பு பகுதிகளுக்குள் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கடந்த சிலநாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக மழைநீர் சாலையிலே தேங்கி நிற்கிறது.மழைநீர் வெளியேற வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் சாலைகள் முழுவதும் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி தருகிறது.
சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு செல்வதற்கு மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரை மோட்டர் கொண்டு வெளியேற்றி தரவேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.