முஸ்லீம்லீக் பொதுகுழுவில் தீர்மானம்!!
பட்டுக்கோட்டையில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றது, இப்பொதுகுழுவில் மாவட்ட துணைத்தலைவர் கே,கே,ஹாஜா நஜ்முதீன் தலைமையில் நடைபெற்ற இப்பொது குழுவில்,
பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அதில் முதனமையானதாக விரைவில் நடக்க இருக்கும் முஸ்லீம் லீக்கின் மாநில மாநாட்டை தஞ்சை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் நடத்திட தலைமையை வலியுறுத்தியுள்ளன.
இப்பொதுகுழு கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் கலந்துகொண்டு கூட்டத்தை வழி நடத்தினார். அப்பொழுது நகர,கிளை,பிரைமரி ஆகிய கிளைகள் சி\றப்புடன் செயலாற்றி எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் நமது கூட்டனியின் வெற்றிக்கு பாடுபட கேட்டுகொண்டார்.
இறுதியாக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அதில் திருவாரூர்-காரைக்குடி மார்க்கத்தில் விரைந்து ரயில் போக்குவரத்தை துவங்க வேண்டும்,
வருகிற 2021 ம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற உள்ள மாநில மாநாட்டை தஞ்சை தெற்கு மாவட்டத்தில் நடத்துவது என்றும்,அந்த மாநாடு வெற்றி பெற கடுமையாக பாடுபடுவது என்றும் ஏகோபித்த முஸ்லிம்லீக்கின் நிர்வாகிகள் சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் மதுக்கூர் ஏ,எம், அப்துல்காதர் ஹாஜியார், மாவட்ட துணைத்தலைவர் எஸ்,எஸ், நூர்தீன், தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பி,எஸ்,ஹெச், ரபீக்தீன், தஞ்சாவூர் முன்னால் பொறுப்பு தலைவர் எம்,ஜே, அப்துல் ரவூப், மாவட்ட செயலாளர் அமீது சுல்தான், அதிராம்பட்டினம் நகர செயலாளர் வழக்கறிஞர் முனாப், பேராவூரணி நகர தலைவர் சம்சுதீன், பட்டுக்கோட்டை பொறுப்பாளர் எம்,ஏ,அமானுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட செயலாளர் எஸ்,எம், ஜெய்னுல் ஆபிதீன் நிகழ்ச்சி களை தொகுத்து வழங்கினார். இப்பொது குழுவில் பல்வேறு இயக்கங்க்களை சார்ந்த பலரும் தங்களை முஸ்லீம் லீக்கில் இணைத்துகொண்டனர்.