தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் பேருந்து நிலையம் அருகே முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 103வது பிறந்தநாளை காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடினர்.
தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் கமால் பாட்ஷா தலைமை தாங்கினார்.மாநில மீனவர் அணி செயலாளர் வடுகநாதன்,மல்லிப்பட்டினம் நகர தலைவர் அப்துல் ஜப்பார் நகரச் செயலாளர் காதர் சா இளைஞர் காங்கிரஸ் தஞ்சை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் நூருல் அமீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் வட்டார ஒருங்கிணைப்பாளர்G. இராமகிருஷ்ணன், புதுபட்டினம் தலைவர் முத்து பொதியன்,ஜெயினுல் அப்தீன்,ஹக்கீம்,அமீன்,அப்துல் ரஹ்மான்,முகம்மது பாஹீம் சல்மான் கான் மற்றும் இளைஞர் காங்கிரசார் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.