வேல் யாத்திரை நடத்த நாதவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது எப்படி?என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து செய்தியாளார்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளார் சீமான், தமிழகத்தில் பாஜக கட்சியினர் சார்பில் வேல் யாத்திரை நடத்த உள்ளது., பாஜாகவினர் வேல் யாத்திரை நடத்துவதே இட ஒதுக்கீட்டு பிரச்சனைகளை மறைப்பதற்காகத்தான் என குற்றம் சாட்டிய சீமான், மக்களின் பிரச்சனைக்கு பாரதிய ஜனதா துணை நிற்காது என்றார்,
மக்களின் பிரச்சனையே பாரதிய ஜனதா தான் எனவும் கூறிய அவர், எனது முப்பாட்டன் முருகன் வேல் குற்றிய போது இழிவாக தான் பேசினார்கள்.
இந்நிலையில், என்னையே வேல் யாத்திரை செய்ய அனுமதிக்காத போது பாஜகவுக்கு மட்டும் தமிழக அரசு அனுமதியளித்துள்ளது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.