அதிரையில் சாலை விபத்து
அதிரை எக்ஸ்பிரஸ்:-தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டிணம் காதிர் முகைதீன் கல்லூரி முன்பு இருசக்கர வாகனம் மீது மினிலாரி மோதி விபத்து ஒருவர் படுகாயம்.
தஞ்சாவூர் மாவட்டம்,ஒரத்தநாடை சேர்ந்தவர்கள் காதர் சுல்தான் (வயது 34) மற்றும் ஜஹபர்கான்.இவர்கள் இருவரும் அதிராம்பட்டிணத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் அதிரையை நோக்கி வரும்பொழுது ,எதிரே உடையநாட்டில் இருந்து அதிரை நோக்கி வந்து கொண்டிருந்த மினிலாரி மோதியதில் நிலைதடுமாறி கிழே விழுந்ததில் காதர் சுல்தான் என்பவருக்கு காலில் பலத்த காயம் எற்பட்டது.
இதனை அடுத்து 108 ஆம்புலன்ஸ் முலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதல் உதவி செய்த பின்னர் மேல் சிகிச்சைகாக தஞ்சாவூர் கொண்டுசென்றுள்ளனர்.சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மினிலாரி மற்றும் இருசக்கர வாகனத்தை கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரனை செய்து வருகின்றனர்.