தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மேலத்தெருவில் அமைந்திருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தற்பொழுது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
பள்ளி வளாகம் மற்றும் அருகிலுள்ள வீடுகளுக்கு செல்லும் மின் இணைப்புக்கான உயர் அழுத்த மின் கம்பிகள் பள்ளி வளாகத்தின் மேலே செல்கிறது.
இந்நிலையில் பள்ளி வளாகம் அருகில் அமைந்திருக்கும் வேப்பிலை மரத்தின் கிளைகள் உயர் அழுத்த மின் கம்பியில் படும் வண்ணம் அமைந்துள்ளது. இதனால் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது.
எனவே, மின்வாரிய அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த மறக்கிளைகளை அகற்றி சரி செய்து கொடுக்குமாறு இப்பள்ளி தலைமையாசிரியர் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.