தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் காணொலி காட்சி மூலம் மாவட்ட ஆட்சியர் கோவிந்தர ராவ் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநில விவசாயிகள் சங்க தலைவரும்,தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கமால் பாட்ஷா கலந்துக்கொண்டு விவசாயிகள் சம்மந்தமான கோரிக்கைகளை வைத்தார் மேலும் சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மல்லிப்பட்டிணத்தில் வெறிநாய்கள் மதராஷா செல்லும் மாணவர்களை,பொதுமக்களை கடித்து வருவதால் வெளியில் நடமாட முடியாத அச்சத்தில் இருந்து வருவதையும் மாவட்ட ஆட்சியரிடம் காணொலி வாயிலாக கோரிக்கை வைத்தார்.உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகவும் மாவட்ட கலெக்டர் உறுதியளித்தார்.