Friday, April 19, 2024

தமிழகத்தில் பருவமழை தொடங்க அறிகுறி?

Share post:

Date:

- Advertisement -

விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்துள்ள நிலையில், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, கட்டங்குடி, பாளையம்பட்டி, ஆத்திப்பட்டி ,காந்திநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது.

இராஜபாளையம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான தளவாய்புரம், சேத்தூர், முறம்பு, சத்திரபட்டி உள்ளிட்ட இடங்களில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டியுள்ள பகுதியிலும் கனமழை பெய்து வருவதால் தென்னை, மா, கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மழையின் காரணமாக புளியமரம் சாலையில் சாய்ந்ததால் வாகனங்கள் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரத்தின் கிளைகள் மின்சாரக் கம்பியில் விழுந்ததில் மின்கம்பம் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதனிடையே வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகும் நிலையில் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழையும், நாகை, தஞ்சை,திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...