Wednesday, April 24, 2024

25,000 உறுப்பினர் இருந்தால் மட்டுமே அரசியல் கட்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் – உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து

Share post:

Date:

- Advertisement -

குறைந்தபட்சம் 25,000 உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே அரசியல் கட்சி தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

தஞ்சாவூரைச் சேர்ந்த தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தமிழ்நேசன், திருச்சி அசூரில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர் நிறுவனத்திற்கு தடை விதிக்க கோரி மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த, நீதிபதிகள் கிருபாகரன்,புகழேந்தி அமர்வு, பணம் பறிக்கும் நோக்கத்துடன் தொடரப்பட்டதாக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்தனர்.

தமிழகத்தில் லெட்டர் பேட் அரசியல் கட்சிகள் பணம் பறிக்கும் நோக்கத்துடன் செயல்படுவதாக கூறிய நீதிபதிகள்,இதனைத் தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அரசியல் கட்சி தொடங்க தேர்தல் ஆணையம் எதன் அடிப்படையில் அனுமதி வழங்குகிறது? என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.

குறைந்த பட்சம் 25 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே கட்சி என அனுமதி வழங்க வேண்டும் என்ற நீதிபதிகள், தேர்தல் ஆணையம், உள்துறை அமைச்சகம், சட்டத்துறை, பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...